123. அருள்மிகு சூட்ஷமபுரீஸ்வரர் கோயில்
இறைவன் சூட்ஷமபுரீஸ்வரர், மங்களநாதர்
இறைவி மங்களநாயகி
தீர்த்தம் மங்கள தீர்த்தம்
தல விருட்சம் வில்வம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருச்சிறுகுடி, தமிழ்நாடு
வழிகாட்டி மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள கொல்லுமாங்குடியில் பிரியும் வலதுபுற சாலையில் சென்று அங்கிருந்து கடகம்பாடி வந்து வடுகக்குடி வழியாக சுமார் 10 கி.மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம். திருப்பாம்புரம் கோயிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு.
தலச்சிறப்பு

Tirusirukudi Gopuram Tirusirukudi Angarahanஅம்பிகை ஒரு கைப்பிடி மண் எடுத்து லிங்கம் அமைத்து வழிபட்ட தலமாதலால் 'சிறுபிடி' என்பது மருவி 'சிறுகுடி' என்று பெயர் பெற்றது.

இத்தலத்து மூலவர் 'சூட்ஷமபுரீஸ்வரர்', 'மங்களநாதர்' என்னும் திருநாமங்களுடன், சிறிய வடிவ லிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். அம்பிகை 'மங்களநாயகி' என்னும் திருநாமத்துடன் சிறிய வடிவினளாக காட்சியளிக்கின்றாள்.

பிரகாரத்தில் மங்கள விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

Tirusirukudi AmmanTirusirukudi Moolavarஅம்பிகை, கருடன், செவ்வாய், கந்தர்வர்கள் ஆகியோர் வழிபட்ட தலம்.

இங்கு வைத்தீஸ்வரன் கோயில் போல் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. செவ்வாய் தோஷ பரிகாரங்களும் செய்கிறார்கள்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com